ADDED : மே 26, 2025 02:48 AM
கே.கே.நகர்: கே.கே.நகர் வன்னியர் தெரு சந்திப்பில் உள்ள பூக்கடையில், கேரள லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் வந்தது.
விசாரித்த போலீசார், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன், 39, என்பவரை கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர். இவர், கோயம்பேடு சந்தை அருகே உள்ள விடுதியில் தங்கி லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.