ADDED : ஜூன் 11, 2025 12:50 AM

கர்நாடகாவில் நடந்த விழாவில், ஜோய் ஆலுக்காஸ் பவுண்டேஷன் சார்பில் கட்டப்பட்ட, பின்தங்கிய மக்களுக்கான 50 வீடுகளை, கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, பயனாளிகளிடம் வழங்கினார். விழாவில், ஜோய் ஆலுக்காஸ் குழும தலைவர் ஜோய்
ஆலுக்காஸ், எம்மார் பிராப்பர்ட்டீஸ் தலைமை நிர்வாக அதிகாரி முகமது ரிஹான் நவாப், கர்நாடக சாலை போக்குவரத்து கழக துணைத் தலைவர் முகமது ரிஸ்வான் நவாப், பெங்களூரு ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் தலைவர் சேட்டன் குமார் மேத்தா, ஜோய் ஆலுக்காஸ் செயல் இயக்குநர் தாமஸ் மேத்யூ ஆகியோர் பங்கேற்றனர்.