Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/நகை கொள்ளை 11 சவரன் மீட்பு

நகை கொள்ளை 11 சவரன் மீட்பு

நகை கொள்ளை 11 சவரன் மீட்பு

நகை கொள்ளை 11 சவரன் மீட்பு

ADDED : பிப் 06, 2024 12:21 AM


Google News
வேளச்சேரி, வேளச்சேரி, தேவி கருமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் நாச்சியம்மாள், 47; ஐ.டி., ஊழியர். கடந்த மாதம், 11ம் தேதி, இவரது வீட்டின் பூட்டை உடைத்து, 60 சவரன் நகை மற்றும் 10,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

வேளச்சேரி போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். கொள்ளையில் ஈடுபட்டது, வியாசர்பாடியைச் சேர்ந்த இம்ரான்கான், 37, என தெரிந்தது. கடந்த மாதம், 18ம் தேதி இவரை கைது செய்து, 5 சவரன் நகை மீட்டனர்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில், 6 சவரன் நகையை மீட்டனர். பின், சிறையில் அடைக்கப்பட்டார். மீதி நகை தொடர்பாக, இவரின் உறவினர்கள் மற்றும் சில வியாபாரிகளிடம் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us