Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/மனைவியை கத்தியால் கிழித்த கணவருக்கு சிறை

மனைவியை கத்தியால் கிழித்த கணவருக்கு சிறை

மனைவியை கத்தியால் கிழித்த கணவருக்கு சிறை

மனைவியை கத்தியால் கிழித்த கணவருக்கு சிறை

ADDED : ஜன 08, 2024 01:37 AM


Google News
ஆவடி:பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராம்குமார், 34. இவரது மனைவி வளர்மதி, 30. இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

ராம்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக, வளர்மதிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அது குறித்து கேட்ட போது தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் நேற்று முன்தினம், வளர்மதி கோபித்துக் கொண்டு பட்டாபிராம், தண்டரையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுள்ளார்.

அங்கு சென்ற ராம்குமார், வளர்மதியிடம் வீண் தகராறில் ஈடுபட்டு, காய்கறி நறுக்கும் கத்தியால் அவரை மூன்று இடங்களில் சரமாரியாக கிழித்து விட்டு தப்பினார்.

பலத்த காயமடைந்த வளர்மதிக்கு, தனியார் மருத்துவமனையில் 20 தையல்கள் போடப்பட்டது.

இதுகுறித்து புகாரின்படி, பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிந்து, ராம்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us