/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின் கம்பத்தின் அடிபாகம் சேதம் முறிந்து விழுந்தால் ஆபத்து நிச்சயம் மின் கம்பத்தின் அடிபாகம் சேதம் முறிந்து விழுந்தால் ஆபத்து நிச்சயம்
மின் கம்பத்தின் அடிபாகம் சேதம் முறிந்து விழுந்தால் ஆபத்து நிச்சயம்
மின் கம்பத்தின் அடிபாகம் சேதம் முறிந்து விழுந்தால் ஆபத்து நிச்சயம்
மின் கம்பத்தின் அடிபாகம் சேதம் முறிந்து விழுந்தால் ஆபத்து நிச்சயம்
ADDED : மார் 21, 2025 12:15 AM

ராமாபுரம், வளசரவாக்கம் மண்டலம், 154வது வார்டு ராமாபுரத்தில், லட்சுமிநரசிம்ம பெருமாள் கோவில் பிரதான சாலை உள்ளது. இச்சாலையில், 800 ஆண்டுகள் பழமையான லட்சுமிநரசிம்மர் கோவில் உள்ளது.
கோவில் மற்றும் மற்ற இடங்களுக்காக, ஏராளமானோர் இவ்வழியாக பைக் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இச்சாலையில் மூன்று மின் கம்பங்கள் சிதிலமடைந்து, மிகவும் மோசமான நிலையில் உள்ளன. கம்பத்தின் அடிபாக கான்கிரீட் கலவை பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றனர். இதனால், எந்நேரமும் மின் கம்பங்கள் சரிந்து விழும் அபாயம் நிலவுகிறது.
அப்படி விழுந்தால், பெரும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், பழைய மின் கம்பங்களை அகற்றி புதிய கம்பங்களை அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.