ADDED : ஜன 25, 2024 12:46 AM
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின்படி, குட்கா விற்பனையில் ஈடுபடுவோரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
கடந்த ஏழு நாட்களாக வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த, 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
1,840 கிலோ குட்கா, 67,000 ரொக்கம், ஆட்டோ, கார், இலகுரக வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.