ADDED : பிப் 06, 2024 12:43 AM
சென்னை, நிலவரித் திட்ட துறையில் கழிவு செய்யப்பட்ட 'ஜீப்' பொதுமக்கள் முன்னிலையில், வரும் 20ம் தேதி ஏலம் விடப்படுகிறது.
சென்னை மாவட்டம், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறையில் கழிவு செய்யப்பட்ட, 'மகேந்திரா ஜீப்' எனும் அரசு வாகனம், பொதுமக்கள் முன்னிலையில், வரும் 20ம் தேதி ஏலம் விடப்படுகிறது.
ஏலத்தில் பங்கேற்போர், அரசு நிர்ணயித்துள்ள, 10 சதவீத முன்பிணை தொகையை, வரைவோலையாக செலுத்த வேண்டும். விருப்பமுள்ளோர், சென்னை நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனர் அல்லது 99401 08998 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்து உள்ளார்.