ADDED : செப் 08, 2025 06:25 AM
சென்னை:சென்னை அண்ணா நகர், அண்ணா சாலை, கிண்டியில் நாளை காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.
அண்ணா நகர்: செயற்பொறியாளர் அலுவலகம், எண்.1100, எச் பிளாக், 5வது தெரு, 11வது பிரதான சாலை, அண்ணா நகர்.
அண்ணா சாலை: செயற்பொறியாளர் அலுவலகம், எண்.6, லபாண்ட் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை - 2.
கிண்டி: செயற்பொறியாளர் அலுவலகம், இரண்டாவது தளம், 110 கிலோ வோல்ட் திறன் கே.கே.நகர் துணைமின் நிலையம்.
மேற்கண்ட இடங்களில் நடக்கும் குறைதீர் கூட்டங்களில் அண்ணா நகர், அண்ணா சாலை, கிண்டி மற்றும் அதைச் சுற்றிய இடங்களில் வசிப்போர் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான அனைத்து குறைகளையும் மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.