ADDED : பிப் 06, 2024 12:58 AM

வில்லிவாக்கம் அகத்தீஸ்வர சுவாமி திருக்கோவிலில், பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்கள் குழு தேர்தல், துணை ஆணையர் சி.நித்யா, சென்னை மண்டல உதவி ஆணையர் பி.அறிவழகன், கோவில் செயல் அலுவலர் அ.குமரேசன் முன்னிலையில் நேற்று நடந்தது.
இதில், ஜெ.பாஸ்கர் அறங்காவலர் குழுத் தலைவராகவும், வி.க.நித்தியானந்தம், மு.வேலாயுதம், த.பவானி, த.ராஜேந்திரகுமார் ஆகியோர் அறங்காவலர்களாகவும் பதவியேற்றனர். உடன், கோவில் மேலாளர் தே.குகன், அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள்.