Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பள்ளி மாணவ - மாணவியர் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

பள்ளி மாணவ - மாணவியர் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

பள்ளி மாணவ - மாணவியர் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

பள்ளி மாணவ - மாணவியர் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

ADDED : ஜூலை 02, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
ஆலந்துார்,போதை ஒழிப்பு குறித்து, மாணவ - மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

புனித தோமையார் மலை பகுதியில் அமைந்துள்ள மாண்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பாக, போதை ஒழிப்பு குறித்து, விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

பள்ளி சாரண சாரணியர் இயக்கம், தேசிய மாணவர் படை, சாலை பாதுகாப்புப் படை மாணவ - மாணவியர் 350 பேர், போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி, 2 கி.மீ., துாரம் பேரணி சென்றனர்.

பள்ளி முதல்வரும், தாளாளருமான ஸ்டீபன் சேவியர், துணை முதல்வர் பாக்கியநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆலந்துார் மகளிர் நீதிமன்ற நீதிபதி தீபிகா ஹேம்குமார், புனித தோமையர் மலை காவல் துணை ஆணையர் சீனிவாசன் ஆகியோர், பேரணியை துவக்கி வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us