Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.46 கோடி மதிப்பீட்டில் வடிகால்வாய் பணி துவக்கம்

ரூ.46 கோடி மதிப்பீட்டில் வடிகால்வாய் பணி துவக்கம்

ரூ.46 கோடி மதிப்பீட்டில் வடிகால்வாய் பணி துவக்கம்

ரூ.46 கோடி மதிப்பீட்டில் வடிகால்வாய் பணி துவக்கம்

ADDED : மார் 19, 2025 12:26 AM


Google News
Latest Tamil News
பெருங்குடி,பெருங்குடி மண்டலம், 181க்கு உட்பட்ட கொட்டிவாக்கம், வார்டு -182க்கு உட்பட்ட பெருங்குடி ஆகிய பகுதிகளில், மழைநீர் வடிகால்வாய் பணி, நேற்று முன்தினம் துவங்கியது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கொட்டிவாக்கத்தில், 7 சாலைகளில், 1.3 கி.மீ நீளத்திற்கு, 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், பெருங்குடியில் 69 சாலைகளில், 17 கி.மீ நீளத்திற்கு, 41 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், இத்திட்டம் அமையவுள்ளது.

இத்திட்டம், கே.எப்.டபிள்யு., எனும் ஜெர்மன் டெவலப்மென்ட் வங்கியில், சென்னை பெருநகர வட்டார வளர்ச்சி ஆணையம் கடன் பெற்று, எம்., 2 கோவளம் வடிகால்வாய் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளது.

இக்கால்வாய், பகிங்ஹாம் கால்வாய் இணைக்கப்படும். இத்திட்டத்தை ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்வில், மண்டல குழு தலைவர், செயற்பொறியாளர் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us