/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தெய்வ சேக்கிழார் விழா குன்றத்துாரில் துவக்கம் தெய்வ சேக்கிழார் விழா குன்றத்துாரில் துவக்கம்
தெய்வ சேக்கிழார் விழா குன்றத்துாரில் துவக்கம்
தெய்வ சேக்கிழார் விழா குன்றத்துாரில் துவக்கம்
தெய்வ சேக்கிழார் விழா குன்றத்துாரில் துவக்கம்
ADDED : மே 24, 2025 12:18 AM
குன்றத்தூர்:குன்றத்துாரில் 12ம் நுாற்றாண்டில் பிறந்தவர் சேக்கிழார். இவர், பெரியபுராணத்தை இயற்றியவர்.
குன்றத்துாரில் சேக்கிழாருக்கு தனி கோவிலும், அரசு சார்பில் மணிமண்டபமும் கட்டப்பட்டுள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஆண்டுதோறும் மூன்று நாள் தெய்வ சேக்கிழார் விழா கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு விழா, குன்றத்துாரில் சேக்கிழாரால் கட்டப்பட்ட திருநாகேஸ்வரர் கோவிலில் இருந்து, வாத்தியங்கள் முழங்க நேற்று நடந்தது. சேக்கிழார், வீதிகளில் உலா வந்தார்.
அரசு சார்பில், தெய்வ சேக்கிழார் விழாவை, அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் ஆகியோர், குன்றத்துாரில் நேற்று துவக்கி வைத்தனர்.