Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாத இதழ் ஆசிரியருக்கு கத்தி வெட்டு

மாத இதழ் ஆசிரியருக்கு கத்தி வெட்டு

மாத இதழ் ஆசிரியருக்கு கத்தி வெட்டு

மாத இதழ் ஆசிரியருக்கு கத்தி வெட்டு

ADDED : ஜன 06, 2024 12:17 AM


Google News
திருவேற்காடு, திருவேற்காடு, பல்லவன் நகரைச் சேர்ந்தவர் நாராயணசாமி, 52; அவர், அதே பகுதி எம்.ஜி.ஆர்., நகரில், 'அக்னி புரட்சி' எனும் மாத இதழ் நடத்தி வருகிறார்.

கடந்த டிச., 29ம் தேதி இரவு, அலுவலகத்தில் தனியாக இருந்தார். அப்போது, 'பஜாஜ் பல்சர்' ரக இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர், அவரிடம் 'புத்தாண்டு வாழ்த்து போஸ்டர் அச்சடிக்க வேண்டும். எவ்வளவு கட்டணம்' என்றனர்.

அதற்கு நாராயணசாமி 'இங்கு போஸ்டர் அச்சடிப்பதில்லை. திருவேற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள அச்சகத்திற்கு செல்லுங்கள்' என்று கூறியிருக்கிறார். இதைத்தொடர்ந்து மர்ம நபர்கள் நாராயணசாமியிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் ஒருவர், தன்னிடம் இருந்த கத்தியால் அவரது தலையில் வெட்டினார்.

படுகாயமடைந்த நாராயணசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து விசாரித்த திருவேற்காடு போலீசார், திருமழிசை, கஸ்துாரிபாய் தெருவைச் சேர்ந்த ஜெகன்னாதன், 24, என்பவரை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us