/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மதுக்கூடத்தில் தம்பதி மீது தாக்குதல் மதுக்கூடத்தில் தம்பதி மீது தாக்குதல்
மதுக்கூடத்தில் தம்பதி மீது தாக்குதல்
மதுக்கூடத்தில் தம்பதி மீது தாக்குதல்
மதுக்கூடத்தில் தம்பதி மீது தாக்குதல்
ADDED : ஜூன் 18, 2025 11:55 PM
அமைந்தகரை,மேற்கு மாம்பாலத்தைச் சேர்ந்த 27 வயது பெண், தன் கணவருடன் அமைந்தகரையில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள தனியார் மதுபான கூடத்திற்கு வந்தார்.
அங்கு நடனமாடியபோது, நபர் ஒருவர் அப்பெண்ணின் அருகில் நடனமாடியபடி தொந்தரவு செய்துள்ளார். இதை தட்டிக் கேட்டதால், அவருடன் வந்த நான்கு நபர்கள், தம்பதியிடம் தகராறு செய்து தாக்கிவிட்டு தப்பினர்.
காயமடைந்த இருவரும் மருத்துவமனையீல் சிகிச்சை பெற்று, அமைந்தகரை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து, வழக்கில் தொடர்புடைய அயனாவரத்தைச் சேர்ந்த ஈஸ்வரன், 27, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.