சி.ஐ.எஸ்.எப்., வீரரை தாக்கிய கும்பல்
சி.ஐ.எஸ்.எப்., வீரரை தாக்கிய கும்பல்
சி.ஐ.எஸ்.எப்., வீரரை தாக்கிய கும்பல்
ADDED : ஜன 12, 2024 11:57 PM
சாஸ்திரி நகர், பெசன்ட் நகரை சேர்ந்தவர் கைலாஷ் சந்த் குமாவத், 33. மத்திய தொழில் துறை பாதுகாப்பு படை தலைமை காவலரான இவர், ராஜாஜிபவனில் உள்ள விமான நிலைய தெற்கு மண்டல டி.ஐ.ஜி., அலுவலகத்தில் பணிபுரிகிறார்.
கடந்த 11ம் தேதி பணிக்கு சென்ற போது ஊரூர் ஆல்காட்குப்பம் சாலை அருகில் அவரை வழிமறித்த வடமாநில நபர்கள் மூவர், இருப்பதை கொடுக்கும்படி மிரட்டி, அவரை தாக்கி சென்றனர்.
இதுகுறித்த புகாரின்படி, சாஸ்திரி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.