Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின்சார பஸ்கள் சேவை 3ல் துவக்குகிறார் முதல்வர்

மின்சார பஸ்கள் சேவை 3ல் துவக்குகிறார் முதல்வர்

மின்சார பஸ்கள் சேவை 3ல் துவக்குகிறார் முதல்வர்

மின்சார பஸ்கள் சேவை 3ல் துவக்குகிறார் முதல்வர்

ADDED : மே 31, 2025 03:19 AM


Google News
சென்னை:பயணியர் தேவையை கருத்தில் வைத்து, தனியார் பங்களிப்போடு சென்னையில், 1,100 மின்சார தாழ்தள பேருந்துகளை இயக்க, மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்தது.

முதற்கட்டமாக, 500 தனியார் மின்சார பேருந்துகளை இயக்க, கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்து, தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இதுவரையில், 'ஏசி' வசதியுள்ள, 'ஏசி' வசதி இல்லாத 100க்கும் மேற்பட்ட மின்சார பஸ்கள், சேவை அளிக்க தயாராக பெரும்பாக்கம், வியாசர்பாடி பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த பேருந்துகளுக்காக, பல்லவன் இல்லத்தில் உள்ள மத்திய பணிமனை, வியாசர்பாடி, பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி ஆகிய பணிமனைகளில், சார்ஜ்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக 120 மின்சார பேருந்துகளை, முதல்வர் ஸ்டாலின் வரும் 3ம் தேதி துவங்கி வைக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us