/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நீச்சல் குளத்தில் மூழ்கி சென்னை வாலிபர் உயிரிழப்பு நீச்சல் குளத்தில் மூழ்கி சென்னை வாலிபர் உயிரிழப்பு
நீச்சல் குளத்தில் மூழ்கி சென்னை வாலிபர் உயிரிழப்பு
நீச்சல் குளத்தில் மூழ்கி சென்னை வாலிபர் உயிரிழப்பு
நீச்சல் குளத்தில் மூழ்கி சென்னை வாலிபர் உயிரிழப்பு
ADDED : செப் 01, 2025 07:23 AM

வானுார் : சென்னை, வியாசர்பாடியை சேர்ந்தவர் கார்த்திக், 31; கூலி தொழிலாளி. சில தினங்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த பிரேம், அஜித், திலீபன் உட்பட, 9 பேருடன், வேளாங்கண்ணி சர்ச் கொடியேற்ற விழாவிற்கு நடைபயணம் சென்றார்.
ஆக., 29ல் வேளாங்கண்ணியில் இருந்து நண்பர்களுடன் புதுச்சேரி வந்தார். அங்கிருந்து ஆரோவில் அடுத்த குயிலாப்பாளையம் தனியார் தங்கும் விடுதியில், ஒன்பது பேரும் அறை எடுத்து தங்கினர்.
நேற்று முன்தினம், அங்குள்ள நீச்சல் குளத்தில் நண்பர்கள் அனைவரும் குளித்த போது, எதிர்பாராதவிதமாக கார்த்திக் நீரில் மூழ்கி இறந்தார். ஆரோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.