ADDED : மே 23, 2025 12:18 AM
சென்னைபெரியமேடு, மை லேடி பூங்கா பின்புறம் நேற்று முன்தினம் இரவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்த, நாகராஜன், 36 என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அவரது கை பையை சோதனை செய்தபோது, விற்பனைக்காக, 1 கிலோ எடையிலான கஞ்சா ஆயில் வைத்திருந்தது தெரியவந்ததது. போலீசார் அவரை கைது செய்தனர்.