
1. இந்தியாவின் நீர் மனிதன் ராஜேந்தர்சிங்
ஆசிரியர்: ஜெகாதா
பக்கம்: 220, விலை: ரூ. 270
வெளியீடு: சத்யா
-
இந்தியாவின் வறண்ட மாநிலமான ராஜஸ்தானில், 850 கிராமங்களில், 4,500 தடுப்பணைகளைக் கட்டி, மழைநீர் சேமிப்பு திட்டத்தின் வாயிலாக ஆறு, குளங்களை மீட்டவர் ராஜேந்திரசிங். ஏளனம் செய்த மக்களையே, தன் சக்தியாக்கி சாதித்த இவரது வியூகங்களை சொல்லும் நுால்.
*****
2. தமிழ் இலக்கிய வரலாறு
ஆசிரியர்: தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
பக்கம்: 384
விலை: ரூ. 380
வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
--
புதுமைக்காலம் துவங்கி, சிற்றிலங்கியங்கள், சோழர்கால காப்பியங்கள், சமண காப்பியங்கள், ஆழ்வார், நாயண்மார்கள் காலம், இரட்டைக்காப்பியங்கள், சங்கப்பாடல்கள் வரை தமிழ் இலக்கிய வரலாற்றை ஆய்வாக செய்து, சிகாகோவில் ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பு நுால்.