ADDED : ஜூன் 26, 2025 12:23 AM
சென்னை, மத்திய உள்துறை அமைச்சரை தரக்குறைவாக விமர்சித்த, தி.மு.க., - எம்.பி., ராஜா மீது நடவடிக்கை கோரி, தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு சார்பில், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தி.மு.க., - எம்.பி., ராஜா பேசுகையில், 'தமிழகத்தை பிடிக்கப்போவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். அவர் ஒரு முட்டாள்' என, பேசினார்.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தரக்குறைவாக பேசிய, தி.மு.க., - எம்,பி., ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக பா.ஜ., துணை தலைவரும், வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பால்கனகராஜ், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.