Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அரசு அச்சக பணியாளர்களுக்கு குடியிருப்புகள்

அரசு அச்சக பணியாளர்களுக்கு குடியிருப்புகள்

அரசு அச்சக பணியாளர்களுக்கு குடியிருப்புகள்

அரசு அச்சக பணியாளர்களுக்கு குடியிருப்புகள்

ADDED : ஜூன் 14, 2025 02:26 AM


Google News
Latest Tamil News
புதுவண்ணாரப்பேட்டை:அரசு அச்சகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, 40 கோடி ரூபாய் செலவில், புதுவண்ணாரப்பேட்டை, காமராஜர் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.

இதை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர், நேற்று ஆய்வு செய்தனர். மேயர் பிரியா, வடசென்னை எம்.பி., கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.,க்கள் ஆர்.டி.சேகர், எபினேசர், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் கூறியதாவது:

தமிழக அரசின் எழுதுப்பொருள், அச்சுத் துறையின் அரசு அச்சகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, 40 கோடி ரூபாய் செலவில் புதுவண்ணாரபேட்டை, காமராஜர் நகரில், புதிதாக ஆறு மாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதில் 96 பணியாளர்கள் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், 430 சதுர அடி வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தளத்திலும் 16 குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us