/உள்ளூர் செய்திகள்/சென்னை/அம்மா உணவகத்தில் தி.மு.க.,வினரை சேர்க்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுஅம்மா உணவகத்தில் தி.மு.க.,வினரை சேர்க்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
அம்மா உணவகத்தில் தி.மு.க.,வினரை சேர்க்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
அம்மா உணவகத்தில் தி.மு.க.,வினரை சேர்க்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
அம்மா உணவகத்தில் தி.மு.க.,வினரை சேர்க்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
ADDED : ஜன 12, 2024 01:05 AM
வளசரவாக்கம் வளசரவாக்கம் மண்டலத்தில் உள்ள அம்மா உணவக ஊழியர்களை மாற்றி, தி.மு.க.,வினரை சேர்க்க முயற்சி நடந்து வருவதாக, அம்மா உணவக ஊழியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
வளசரவாக்கம் மண்டலத்தில் 13 வார்டுகள் உள்ளன. ஒரு வார்டிற்கு இரண்டு அம்மா உணவகம் என, 26 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு பணிபுரியும் ஊழியர்கள், பல்வேறு பெண்கள் சுய உதவி குழுவில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள். இவர்களுக்கு தினமும், 300 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. அம்மா உணவகங்கள் அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டதால், அதில் பணிபுரியும் பெரும்பாலான பெண் ஊழியர்களும் அ.தி.மு.க., அனுதாபிகளாக உள்ளனர்.
இந்நிலையில், வளசரவாக்கம் மண்டலத்தில் அம்மா உணவகத்தில் பணி செய்யும் தலைவி மற்றும் துணை தலைவிகளை மாற்றி அமைக்கவும், தி.மு.க., அனுதாபிகளை நியமிக்கவும் முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் அம்மா உணவக ஊழியர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், அம்மா உணவக தலைவிகள் மற்றும் துணை தலைவிகளை மாற்றி அமைப்பது குறித்து தெரிவிக்கப்பட்டதால், ஊழியர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.
இதுகுறித்து, அம்மா உணவக ஊழியர்கள் கூறியதாவது:
அம்மா உணவகத்தில் உள்ள தலைவி மற்றும் துணை தலைவிகளை மாற்றி அமைக்க, தி.மு.க.,வினர் முயன்று வருகின்றனர்.
மாதந்தோறும் 26 அம்மா உணவகங்களின் பராமரிப்பு பணிக்காக, 4 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
ஆனால், அம்மா உணவகத்தில் பல மாதங்களாக சப்பாத்தி சமைப்பது, மாவு இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த எட்டு மாதங்களாக தயிர் வாங்கியதற்கு பணம் அளிக்கப்படவில்லை.
ஒரு அம்மா உணவகத்தில், 12 ஊழியர்கள் பணி செய்த இடத்தில், தற்போது மூன்று முதல்- ஐந்து பேர் மட்டுமே பணி செய்கின்றனர்.
தற்போது, அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளதால், தி.மு.க.,வினரை உள்ளே கொண்டுவர நினைக்கின்றனர்.
வேறு எந்த மண்டலத்திலும், தலைவி மற்றும் துணை தலைவியை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.