/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால் மணலியில் 200 ஏக்கரில் விவசாயம் பாதிப்பு மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால் மணலியில் 200 ஏக்கரில் விவசாயம் பாதிப்பு
மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால் மணலியில் 200 ஏக்கரில் விவசாயம் பாதிப்பு
மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால் மணலியில் 200 ஏக்கரில் விவசாயம் பாதிப்பு
மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால் மணலியில் 200 ஏக்கரில் விவசாயம் பாதிப்பு

சாதகமான சூழல் இல்லை
விளை நிலங்களில் தேங்கும் மழைநீர் வெளியேற, முறையான வடிகால்வாய் வசதி கிடையாது. இதனால், வெள்ளப் பாதிப்பின் போது, விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். தவிர பெரு நிறுவனங்கள், பல லட்சம் ரூபாய் வரை விலை கொடுத்து விளை நிலங்களை வாங்கி வருவதால், விவசாயம் செய்வதற்கான சாதகமான சூழல் இல்லை. இதனாலே விளை நிலங்கள், லாரிகள் நிறுத்துமிடங்களாகவும், கன்டெய்னர் முனையங்களாகவும் மாறி வருகின்றன. இதை தடுக்க, பொன்னேரி நெடுஞ்சாலை - ஆண்டார்குப்பம் சந்திப்பு, துவாரகா நகர் வழியாக பெரிய வடிகால்வாய் அமைத்து கொசஸ்தலை ஆறுக்கு வெள்ள நீரை கடத்தினால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும். - கே.தங்கசிவம், 60, விவசாயி, கன்னியம்மன்பேட்டை, மணலி
நஷ்டம் அடைகிறோம்
சென்னையை ஒட்டிய புறநகர் பகுதி என்பதால், பல ஆண்டுகளுக்கு முன், சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் மணலியில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், கீரை, வாழை பொருட்கள் விற்பனையாகி வந்தன. தற்போது, விவசாயத்திற்கான சாதகமான சூழல் இல்லை. இங்கு விளையும் வாழை இலைகள் இப்பகுதிக்கே போதுமானதாக இல்லை. அதனால், வெளியில் இருந்து இறக்குமதி செய்தும், நஷ்டம் அடைகிறோம். - வி.வெங்கடேசன், 40, வாழை இலை வியாபாரி, மணலி.