Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாப பலி

லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாப பலி

லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாப பலி

லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாப பலி

ADDED : செப் 08, 2025 06:20 AM


Google News
பனையூர்: பனையூர் அருகே, சிமென்ட் கலவை லாரியின் சக்கரத்தில் சிக்கி, அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் பனையூர், பள்ளிக்கூட தெருவில் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், மது போதையில் சுயநினைவின்றி சாலையில் விழுந்து கிடந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 10:50 மணியளவில், அவ்வழியாக வந்த சிமென்ட் கலவை லாரி, அவர் மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லாரியை பறிமுதல் செய்த போலீசார், விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். இறந்தவர் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us