Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 7,800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

7,800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

7,800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

7,800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ADDED : ஜூன் 27, 2025 12:43 AM


Google News
Latest Tamil News
அம்பத்துார்,பெரம்பூரில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள், சென்னை வடக்கு அலகு போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைத்தது. அதன்படி, பெரம்பூர், ஜமாலயா, பின்னி மில் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அங்குள்ள கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6,100 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றி, வியாசர்பாடியைச் சேர்ந்த அசன்மதார், 40, குட்டி, 33, தினேஷ், 24, விஜயகுமார், 23, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 34,000 ரூபாய், இரண்டு லோடு வேன், மூன்று ஸ்கூட்டி பறிமுதல் செய்யப்பட்டன.

எம்.கே.பி நகரில், ரேஷன் அரிசியை மாவாக அரைத்து, முறைகேடாக விற்ற வியாசர்பாடியைச் சேர்ந்த நியூட்டன், 31, என்பவரை நேற்று கைது செய்த போலீசார், பைக் மற்றும் 1,700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us