Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தொழிலாளர்கள் அறையில் 6 போன் பணம் திருட்டு  

தொழிலாளர்கள் அறையில் 6 போன் பணம் திருட்டு  

தொழிலாளர்கள் அறையில் 6 போன் பணம் திருட்டு  

தொழிலாளர்கள் அறையில் 6 போன் பணம் திருட்டு  

ADDED : ஜூன் 26, 2025 12:11 AM


Google News
பெரம்பூர், வியாசர்பாடியைச் சேர்ந்தவர் சம்பத்குமார், 45; மேஸ்திரி. இவர், பெரம்பூர் ஆனந்தவேலு தெருவில் கட்டுமான பணி மேற்கொண்டு வருகிறார். அவருடன், 10க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தங்கி பணி புரிகின்றனர்.

தொழிலாளர்கள் அனைவரும், வேலை முடித்து நேற்று முன்தினம் இரவு துாங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3:00 மணியளவில் எழுந்து பார்த்தபோது, வேலை செய்யும் நபர்களின் ஆறு மொபைல்போன்கள் மற்றும் பணத்துடன் மணிபர்ஸ் திருட்டு போயிருந்தது.

இது குறித்து சம்பத்குமார் செம்பியம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் திருடனை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us