/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வரதட்சணை கொடுமை வழக்கு 4 பேருக்கு மூன்றாண்டு சிறை வரதட்சணை கொடுமை வழக்கு 4 பேருக்கு மூன்றாண்டு சிறை
வரதட்சணை கொடுமை வழக்கு 4 பேருக்கு மூன்றாண்டு சிறை
வரதட்சணை கொடுமை வழக்கு 4 பேருக்கு மூன்றாண்டு சிறை
வரதட்சணை கொடுமை வழக்கு 4 பேருக்கு மூன்றாண்டு சிறை
ADDED : செப் 10, 2025 12:28 AM
சென்னை, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய வழக்கில், நான்கு பேருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணாநகர், மேற்கு விரிவாக்க பகுதியைச் சேர்ந்தவர் பவானீஸ்வரி. இவருக்கும், முகப்பேரைச் சேர்ந்த சுரேஷ்பாலாஜி என்பவருக்கும், 2010ல் திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது வரதட்சணையாக, 200 சவரன் நகை, 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர்.
ஆனால், கூடுதல் வரதட்சணை கேட்டு பவானீஸ்வரியின் மாமனார் கிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால், பவானீஸ்வரி தன் தாயின் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதற்கிடையே, கணவர் சுரேஷ்பாலாஜி இறந்து போனார். இதைத்தொடர்ந்து கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியது குறித்து, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில், பவானீஸ்வரி புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தி மாமனார் கிருஷ்ணன், உறவினர்கள் ஜோதி, கீதா மற்றும் கீதாவின் கணவர் பாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை எழும்பூர் பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி கிரிஜாராணி முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் வாஷிங்டன் தனசேகரன் ஆஜராகி வாதாடினார்.
கிருஷ்ணன் உள்ளிட்ட நான்கு பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் தலா 40,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.