ADDED : பிப் 11, 2024 12:24 AM
சென்னை, லோக்சபா தேர்தலை முன்னிட்டு, சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுதும் இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுப்புலட்சுமி, வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவுக்கும், ஜெயசித்ரா, வியாசர்பாடி குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்கள் உட்பட, 35 பேரை பணியிடமாற்றம் செய்து, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தர்மபுரி, கோயம்புத்துார், கன்னியாகுமரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், சென்னைக்கு இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.