/உள்ளூர் செய்திகள்/சென்னை/2.50 லட்சம் பறவைகள் முகாம் புது சரணாலயமாகிறது ஓதியூர் ஏரி?2.50 லட்சம் பறவைகள் முகாம் புது சரணாலயமாகிறது ஓதியூர் ஏரி?
2.50 லட்சம் பறவைகள் முகாம் புது சரணாலயமாகிறது ஓதியூர் ஏரி?
2.50 லட்சம் பறவைகள் முகாம் புது சரணாலயமாகிறது ஓதியூர் ஏரி?
2.50 லட்சம் பறவைகள் முகாம் புது சரணாலயமாகிறது ஓதியூர் ஏரி?
ADDED : பிப் 12, 2024 02:13 AM

செங்கல்பட்டு மாவட்டம் ஓதியூர் ஏரியில், ஒரே சமயத்தில் 2.50 லட்சம் பறவைகள் முகாமிட்டுள்ளது, கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளன. இதையடுத்து, இப்பகுதி பறவைகள் சரணாலயமாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மே மாதம் வரை வலசை பறவைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளில் வலசை பறவைகள் முகாமிடுகின்றன.
இது குறித்த விபரங்களை ஆவணப்படுத்துவதற்காக, வனத்துறையும், பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் கணக்கெடுப்பு நடத்துகின்றன. இந்த வகையில், சென்னையில், பள்ளிக்கரணை, கேளம்பாக்கம் அடுத்த முட்டுக்காடு கழிமுகம், கழிவேலி ஆகிய இடங்களில் தன்னார்வலர்கள் பறவைகள் கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.
இதில், கிழக்கு கடற்கரை சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவில், ஓதியூர் ஏரி அமைந்துள்ளது.
பழவேற்காடு, பள்ளிக்கரணை, முட்டுக்காடு கழிமுகம் போன்று உவர்நீர் வந்து செல்லும் வகையில், இந்த ஏரி அமைந்துள்ளது.
நீர்நிலை பறவைகளும், உவர்நீர் சார்ந்த பறவைகளும் இங்கு போட்டி போட்டு முகாமிட்டுள்ளதை பார்க்க முடிகிறது. பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இங்கு பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளன.
இது குறித்து, தி நேச்சர் டிரஸ்ட் அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:
சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓதியூர் ஏரி மிக பெரிய பறவைகள் சரணாலயமாக உருவாகி வருகிறது. இங்கு இயல்பான நீர்ப்பறவைகளும், கடலோர பறவைகளும், 2.50 லட்சத்துக்கு மேல் ஒரே சமயத்தில் முகாமிட்டுள்ளன.
சென்னை சுற்றுவட்டாரத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், இங்கு பறவைகள் அதிக எண்ணிக்கையில் குவிந்துள்ளன. சென்னை சுற்றுப்புறத்தில் மிக குறைவாக காணப்படும் பூநாரைகள் இங்கு, 19,000த்துக்கு மேல் காணப்படுகின்றன.
இதற்கு அடுத்தபடியாக, 6,600க்கும் மேற்பட்ட ஊசிவால் வாத்துக்கள் இங்கு முகாமிட்டுள்ளன. உவர்நீர் கலப்பு இருப்பதால், கடல் சார் பறவைகளுக்கு தேவையான உணவு இங்கு கிடைக்கின்றன.
வேறு எந்த வகையிலும் பாதிப்பு இல்லாததால், பறவைகள் இங்கு அதிக எண்ணிக்கையில் முகாமிடுகிறதா என்று ஆராய்ந்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -