Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/அரசு தேர்வில் 25 சதவீதம் ஒதுக்கீடு கோரிக்கை

அரசு தேர்வில் 25 சதவீதம் ஒதுக்கீடு கோரிக்கை

அரசு தேர்வில் 25 சதவீதம் ஒதுக்கீடு கோரிக்கை

அரசு தேர்வில் 25 சதவீதம் ஒதுக்கீடு கோரிக்கை

ADDED : பிப் 10, 2024 12:22 AM


Google News
வியாசர்பாடி, தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர்கள் யூனியனின் சென்னை கோட்ட நிர்வாகிகள் கூட்டம், நேற்று நடந்தது.

இதில், திருக்கோவில் பணியாளர்களை முழு நேர அரசு ஊழியராக்க வேண்டும்; விதி எண் - 110ன் கீழ் தினக்கூலி தொகுப்பு ஊதியம் பெறும் அன்னதானப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

பணியாளர்களுக்கு நிலை- நான்கு செயல் அலுவலர் பணிகளுக்கு, 25 சதவீதம் இட ஒதுக்கீடு அரசாணையை, விரைவில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சென்னை யூனியன் கவுரவ தலைவர் வேலாயுதம், கோட்ட தலைவர் தனசேகர், செயலர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us