/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாநகராட்சி ஊழியர்கள் தந்த ரூ.1.80 கோடி நிவாரண நிதிமாநகராட்சி ஊழியர்கள் தந்த ரூ.1.80 கோடி நிவாரண நிதி
மாநகராட்சி ஊழியர்கள் தந்த ரூ.1.80 கோடி நிவாரண நிதி
மாநகராட்சி ஊழியர்கள் தந்த ரூ.1.80 கோடி நிவாரண நிதி
மாநகராட்சி ஊழியர்கள் தந்த ரூ.1.80 கோடி நிவாரண நிதி
ADDED : ஜன 05, 2024 12:14 AM
சென்னை,மிக்ஜாம் புயல், மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.
அதேபோல், அதிக கனமழையால், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதனால், முதல்வர் நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர் நிதி பங்களிப்பு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், மாநகராட்சியில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் என, 18,000 த்திற்கும் மேற்பட்டோரின் ஒருநாள் ஊதியமான 1.80 கோடி ரூபாயை, தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு மாநகராட்சி நேற்று அளித்துள்ளது.