/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வீட்டின் பால்கனியில் இருந்து விழுந்த 1 வயது குழந்தை பலி வீட்டின் பால்கனியில் இருந்து விழுந்த 1 வயது குழந்தை பலி
வீட்டின் பால்கனியில் இருந்து விழுந்த 1 வயது குழந்தை பலி
வீட்டின் பால்கனியில் இருந்து விழுந்த 1 வயது குழந்தை பலி
வீட்டின் பால்கனியில் இருந்து விழுந்த 1 வயது குழந்தை பலி
ADDED : செப் 14, 2025 10:59 PM
கோயம்பேடு:வீட்டின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த 1 வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
வளசரவாக்கம், அன்பு நகர் 9வது தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன், 32. சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருக்கு, 1 வயதில் சர்வேஸ்வரன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
கடந்த 8ம் தேதி வீட்டின் முதல் தளத்தில் உள்ள பால்கனியில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்தது.
தலையில் பலத்த காயமடைந்த குழந்தையை, பெற்றோர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை, நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து, கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.