Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரயிலில் பணம் கேட்டு மிரட்டிய திருநங்கை கைது

ரயிலில் பணம் கேட்டு மிரட்டிய திருநங்கை கைது

ரயிலில் பணம் கேட்டு மிரட்டிய திருநங்கை கைது

ரயிலில் பணம் கேட்டு மிரட்டிய திருநங்கை கைது

ADDED : ஜூலை 03, 2024 12:29 AM


Google News
சென்னை, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி, கடந்த 29ம் தேதி மாலை மின்சார ரயில் புறப்பட்டது. இந்த ரயில் எழும்பூர், மாம்பலம், சைதாப்பேட்டை ஆகிய நிலையங்களை கடந்து, கிண்டி ரயில் நிலையத்தை அடைந்தது.

அப்போது, ரயிலில் ஏறிய திருநங்கை ஒருவர், வடமாநில வாலிபர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தார். வடமாநில வாலிபர் ஒருவர், 'தன்னிடம் பணம் இல்லை' என்றவுடன் அவரை தாக்கிவிட்டு, மொபைல்போனை பறிக்க முயன்றார். மற்ற வடமாநில பயணியரிடம் பணத்தை கேட்டு தொந்தரவு செய்தார். சிலரை மிரட்டியவாறு அங்கிருந்து சென்றார்.

இதுகுறித்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவியது. இதையடுத்து, அந்த திருநங்கை மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே போலீஸ் உத்தரவிட்டது.

மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, சென்னை பாரிமுனையைச் சேர்ந்த மாதவி, 20, என்ற திருநங்கையை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us