Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்னை திரும்பியோரால் புறநகரில் கடும் நெரிசல்

சென்னை திரும்பியோரால் புறநகரில் கடும் நெரிசல்

சென்னை திரும்பியோரால் புறநகரில் கடும் நெரிசல்

சென்னை திரும்பியோரால் புறநகரில் கடும் நெரிசல்

ADDED : ஜூன் 18, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
மறைமலை நகர், பக்ரீத் பண்டிகை, வார விடுமுறை என தொடர் விடுமுறை வந்ததால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

நேற்று விடுமுறை முடிந்ததையடுத்து, மீண்டும் சென்னை நோக்கி படையெடுத்தனர். இதனால், அதிக அளவில் வாகனங்கள், சென்னைக்கு வந்த வண்ணம் இருந்ததால், பெருங்களத்துார், சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக, 2 கி.மீ., துாரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us