ADDED : ஜூன் 10, 2024 02:04 AM
ஆவடி:ஆவடி நந்தவன மேட்டூர், குமரன் தெருவில் ஸ்ரீ ஆதிபராசக்தி பொன்னியம்மன் கோவில் உள்ளது.நேற்று காலை 7:00 மணிக்கு கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே அம்மன் நெற்றியில் இருந்த அரை சவரன் பொட்டு மற்றும் உண்டியலில் இருந்த காணிக்கை 10,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.