/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'ஆம்புலன்ஸ்' ஊழியரின் கைப்பை திருட்டு 'ஆம்புலன்ஸ்' ஊழியரின் கைப்பை திருட்டு
'ஆம்புலன்ஸ்' ஊழியரின் கைப்பை திருட்டு
'ஆம்புலன்ஸ்' ஊழியரின் கைப்பை திருட்டு
'ஆம்புலன்ஸ்' ஊழியரின் கைப்பை திருட்டு
ADDED : ஜூலை 09, 2024 12:26 AM
ஜாம்பஜார், திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி தெருவில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருப்பவர் நித்யஸ்ரீ, 22 ; '108' ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்.
நேற்று முன்தினம் இரவு, பாரதி சாலை பேருந்து நிறுத்தத்தில் நின்ற தோழியை பார்க்க நித்யஸ்ரீ, தன் இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்தினார்.
அவரிடம் பேசிவிட்டு திரும்பும் போது, வாகனத்தில் வைத்திருந்த, 3 கிராம் கம்மல் அடங்கிய கைப்பையை, மர்ம நபர்கள் திருடியது தெரிந்தது.
இதுகுறித்து, ஜாம்பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.