/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாணவியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார்
மாணவியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார்
மாணவியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார்
மாணவியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார்
ADDED : ஜூலை 18, 2024 12:14 AM
எண்ணுார், எண்ணுார், சின்னகுப்பம் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோ, 49; மின் ஊழியர். இவரது மகள் ஹேமலதா, 20; தனியார் கல்லுாரி மாணவி.
கடந்த 2022 முதல், ஹேமலதா கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, வயிற்று வலி தாங்க முடியாமல், வீட்டின் தனி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர், கதவை உடைத்து பார்த்த போது, துாக்கிட்டு இறந்து கிடந்தது தெரிந்தது.
உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த பின், உடலை இறுதி அஞ்சலிக்காக வீட்டில் வைத்திருந்தனர். நேற்று காலை இறுதிச்சடங்கு நடக்கவிருந்த நிலையில், தகவல் தெரிந்து எண்ணுார் போலீசார் அங்கு வந்தனர்.
மாணவியின் பெற்றோர், ஊர் நிர்வாகத்தினரிடம் பேசி, உடலை பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மாணவி வயிற்று வலியால் தற்கொலை செய்து கொண்டாரா, வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.