Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விலகி வசித்த மனைவியிடம் வம்பு செய்தவர் கைது 

விலகி வசித்த மனைவியிடம் வம்பு செய்தவர் கைது 

விலகி வசித்த மனைவியிடம் வம்பு செய்தவர் கைது 

விலகி வசித்த மனைவியிடம் வம்பு செய்தவர் கைது 

ADDED : ஜூன் 27, 2024 12:35 AM


Google News
பெரம்பூர், பெரம்பூர், சங்கரமடம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கவி, 26. இவரது கணவர், பெரம்பூர் நீலந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார்,33. ஆட்டோ ஓட்டுனராக உள்ளார்.

இவர்களுக்கு 10 ஆண்டுக்கு முன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இரண்டு பெண் குழந்தைகளுடன் சங்கவி தனியாக வசிக்கிறார். விஜயகுமார், வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 22ம் தேதி, இரவு 7:00 மணியளவில், மதுரைசாமி மடம் தெரு வழியே சங்கவி நடந்து வந்து கொண்டிருந்த போது, மது போதையில் ஆட்டோ ஓட்டி வந்த விஜயகுமார், சங்கவியை வழிமறித்து தகராறு செய்து, தாக்கியுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கவி, துாக்க மாத்திரைகளை விழுங்கியுள்ளார். பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சங்கவி, மாஜி கணவர் விஜயகுமார் மீது திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விஜயகுமாரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us