/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மனைவியின் தாய்மாமாவை கொலை செய்தவர் கைது மனைவியின் தாய்மாமாவை கொலை செய்தவர் கைது
மனைவியின் தாய்மாமாவை கொலை செய்தவர் கைது
மனைவியின் தாய்மாமாவை கொலை செய்தவர் கைது
மனைவியின் தாய்மாமாவை கொலை செய்தவர் கைது
ADDED : ஜூன் 26, 2024 12:37 AM
கொருக்குப்பேட்டை, கொருக்குப்பேட்டை, பாரதி நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பழனி, 52; மீன்பிடி வண்டி ஓட்டி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் 'குள்ள' பிரசாத்துக்கும், பழனியின் சகோதரியின் மகள் அனிதாவிற்கும் திருமணமாகி உள்ளது.
திருமணமான 'குள்ள' பிரசாத் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். பழனி, 'குள்ள' பிரசாத்தை கண்டித்து வந்துள்ளார். நேற்று இரவு குடிபோதையில் வீட்டில் இருந்த 'குள்ள' பிரசாத்துக்கும், பழனிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், பழனியை, 'குள்ள' பிரசாத் கத்தியால் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது.
இது குறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து 'குள்ள' பிரசாத்தை கைது செய்தனர். இவர் மீது எட்டு அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.