Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தாமதமாக வந்தால் 'சஸ்பெண்ட்' மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

தாமதமாக வந்தால் 'சஸ்பெண்ட்' மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

தாமதமாக வந்தால் 'சஸ்பெண்ட்' மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

தாமதமாக வந்தால் 'சஸ்பெண்ட்' மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

ADDED : ஆக 03, 2024 12:19 AM


Google News
சென்னை, சென்னை மாநகராட்சியில், அதிகாரிகள், மண்டல அலுவலர்கள் உள்ளிட்டோருடன், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

மண்டல வாரியாக மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் மற்றும் சுகாதார பணிகள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்.

அப்போது, அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குறித்த நேரத்திற்கு பணிக்கு வரவேண்டும். மக்கள் அளிக்கும் புகார்கள், கோரிக்கைகள் மீது உடனடி தீர்வு ஏற்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையின் அனைத்து சாலைகள், தெருக்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என, கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி 11ம் தேதி வரை, தீவிர துாய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது.

அதேபோல், அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை காலை 10:00 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும்.

பணிக்கு வருவது தாமதம், ஓ.பி., அடித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர் என எச்சரித்துள்ளார்.

அத்துடன், பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் கோரிக்கை தொடர்பாக உடனடி தீர்வு காணவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us