Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விளையாட்டு செய்தி - மாநில ஜூனியர் தடகளம் துவக்கம் 3,200 வீரர் - வீராங்கனையர் உற்சாகம்

விளையாட்டு செய்தி - மாநில ஜூனியர் தடகளம் துவக்கம் 3,200 வீரர் - வீராங்கனையர் உற்சாகம்

விளையாட்டு செய்தி - மாநில ஜூனியர் தடகளம் துவக்கம் 3,200 வீரர் - வீராங்கனையர் உற்சாகம்

விளையாட்டு செய்தி - மாநில ஜூனியர் தடகளம் துவக்கம் 3,200 வீரர் - வீராங்கனையர் உற்சாகம்

ADDED : ஜூலை 06, 2024 12:33 AM


Google News
Latest Tamil News
சென்னை,தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 36வது மாநில ஜூனியர் ஓபன் தடகளப் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை பெரியமேடில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில், நேற்று காலை துவங்கியது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட மாநிலம் ழுழுதும் இருந்து, 3,200 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர்.

போட்டியில், பல்வேறு வயதினருக்கு ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு மற்றும் ஈட்டி எறிதல் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட வகையான போட்டிகள் நடக்கின்றன.

தொடர்ந்து, நேற்று மாலை, 2,500 வீரர் - வீராங்கனையர் ஒன்றிணைந்து, விளையாட்டு போட்டிகளில், ஊக்க மருந்துக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.

இந்நிகழ்வு, உலக சாதனை புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டது. போட்டிகள், நாளை வரை தொடர்ந்து நடக்கின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us