ADDED : ஜூலை 21, 2024 01:08 AM
நீலாங்கரை:அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்கள் விற்பனையை தடுக்க, இ.சி.ஆரில் நீலாங்கரை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.
இதில், நீலாங்கரை, வைத்தியலிங்கம் சாலையில் உள்ள தன்ராஜ், 35, என்பவரின் மளிகை கடையில் விற்பனை செய்வது தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், 11 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். கடைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.