/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கம்பத்தில் படர்ந்துள்ள தாவர கொடியால் அச்சம் கம்பத்தில் படர்ந்துள்ள தாவர கொடியால் அச்சம்
கம்பத்தில் படர்ந்துள்ள தாவர கொடியால் அச்சம்
கம்பத்தில் படர்ந்துள்ள தாவர கொடியால் அச்சம்
கம்பத்தில் படர்ந்துள்ள தாவர கொடியால் அச்சம்
ADDED : ஜூலை 18, 2024 12:19 AM

அடையாறு மண்டலம், 170 மற்றும் 178வது வார்டு, களிக்குன்றம், அண்ணா தெரு வழியாக மத்திய கைலாஷ், கிண்டி அடையாறு நோக்கி ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இதனால், அண்ணா தெருவில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த தெருவில் உள்ள தெருவிளக்கு கம்பம் வழியாக, கேபிள், 'டிவி' தொலைபேசி, இன்டர்நெட் கேபிள்கள் கட்டப்பட்டு உள்ளன. கம்பத்தின் கீழ், மின்வினியோக பெட்டி உள்ளது.
இதில், செடி, கொடி அடர்த்தியாக படர்ந்து உள்ளது. இதன் பாரம் தாங்காமல், தெருவிளக்கு கம்பம் சாய்ந்து நிற்கிறது. பலத்த காற்றடித்தால், கம்பம் சாய்ந்து வாகன ஓட்டிகள் மீது விழ வாய்ப்புள்ளது.
அடர்த்தியாக வளர்ந்துள்ள தாவரக்கொடியில், விஷப்பூச்சிகள் இருப்பதால், அக்கம் பக்கத்தில் வசிப்போர் அச்சப்படுகின்றனர். தாவரக்கொடியை அகற்றி, அசம்பாவிதங்களை தடுக்க வேண்டும்.
--ராயப்பன், களிக்குன்றம்.