Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாநகராட்சி தொழில் வரி, விளையாட்டு கட்டணம் உயர்வு! சாலையில் மாடு சுற்றினால் ரூ.15,000 அபராதம்

மாநகராட்சி தொழில் வரி, விளையாட்டு கட்டணம் உயர்வு! சாலையில் மாடு சுற்றினால் ரூ.15,000 அபராதம்

மாநகராட்சி தொழில் வரி, விளையாட்டு கட்டணம் உயர்வு! சாலையில் மாடு சுற்றினால் ரூ.15,000 அபராதம்

மாநகராட்சி தொழில் வரி, விளையாட்டு கட்டணம் உயர்வு! சாலையில் மாடு சுற்றினால் ரூ.15,000 அபராதம்

UPDATED : ஜூலை 31, 2024 05:50 AMADDED : ஜூலை 30, 2024 11:27 PM


Google News
Latest Tamil News
சென்னை : சென்னை மாநகராட்சியில் தொழில் வரி, உரிமம் கட்டணம், விளையாட்டு பயிற்சி கட்டணம் உள்ளிட்டவை உயர்த்தப்பட உள்ளது. அத்துடன், சாலையில் மாடுகள் திரிந்தால், அதற்கான அபராதமும் 15,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை உரிமம் வழங்கும் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த 32 தொழில்களுக்கு கட்டணம் விதிப்பதில் இருந்து, மாநகராட்சி விலகிக் கொண்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் மாதந்திர கவுன்சில் கூட்டம் மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. சாலையில் சுற்றித்திரியும் மாடுகளுக்கான அபராத தொகை உயர்வு, தொழில் வரி உயர்த்துவதற்கான பரிந்துரை, விளையாட்டு திடல்களில் பயிற்சிக்கான கட்டண உயர்வு உள்ளிட்ட, 72 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

குறு, சிறு, நடுத்தர, பெரிய வணிகம் என்ற அடிப்படையில், தொழில் உரிம கட்டணத்தை உயர்த்த, அரசுக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதன்மை குடியிருப்பு பயன்பாடு, கலப்பு குடியிருப்பு, வணிக பயன்பாடு, தொழில்துறை பயன்பாடு, பொது தொழில்துறை பயன்பாடு, சிறப்பு மற்றும் அபாயகரமான தொழில்துறை பயன்பாடு, நகர்ப்புறப்படுத்தக்கூடியது என்ற அடிப்படையில், தொழில் உரிம கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

அதன்படி, 500 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்திய தொழில்களுக்கு, இனி 3,500 முதல் 50,000 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

குறு தொழிகளுக்கு 3,500 ரூபாய் முதல் 7,000 ரூபாய், சிறு தொழில்களுக்கு 7,000 முதல் 10,000, நடுத்தர தொழில்களுக்கு 10,000 முதல் 20,000, பெரிய வணிகங்களுக்கு 15,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை உரிமம் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

அதேநேரம், மதுபானம் விற்பனை, பீடி தயாரிப்பு, மருந்து தயாரிப்பு, மதுக்கூடம் நடத்துதல், ரேஷன் கடை உள்ளிட்ட 32 தொழில் சார்ந்த வணிகங்களுக்கு, இனி மாநகராட்சி சார்பில் உரிமம் வழங்கப்படாது. இந்த 32 வணிக பயன்பாடுகள் மத்திய, மாநில அரசுகளின் அனுமதிக்கு உட்பட்டு செயல்படும் வகையில், உரிமம் வழங்குவதில் இருந்து மாநகராட்சி விலகிக் கொண்டுள்ளது.

தொழில்வரி மற்றும் உரிம கட்டணம் உயர்வுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் பேசுகையில், ''மாநகராட்சியின் உட்கட்டமைப்புகளுக்கு அரசின் நிதி ஆதராரங்கள் மட்டும் போதுமானதாக இருக்காது. சரியான நேரத்தில் தான், தொழில் வரி மற்றும் உரிம வரி உயர்த்தப்பட உள்ளது,'' என்றார்.

இதைத் தொடர்ந்து மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள் வருமாறு:

* சென்னையில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்தால், அவை பிடிக்கப்பட்டு உரிமையாளருக்கு முதல்முறை 5,000 ரூபாய், இரண்டாம் முறை 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்தாண்டில் இதுவரை, 1,425 மாடுகள் பிடிக்கப்பட்டு, 59 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இனி, மாடுகள் சுற்றித்திரிந்தால் முதல்முறை 10,000 ரூபாய், இரண்டாம் முறை 15,000 ரூபாயாக அபராதம் உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும், பிடிப்பட்ட மூன்றாம் நாளில் இருந்து, 1,000 ரூபாய் பராமரிப்பு செலவாக வசூலிக்கப்படும்

* சென்னையில் உள்ள, 390 அம்மா உணவகங்களில், 23,848 பாத்திரம் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இந்த இயந்திரங்களை மாற்ற 7.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது

* சாலையோர வாகன நிறுத்தத்தில் கட்டணம் வசூல் செய்ய, தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. தற்போது, தமிழ்நாடு முன்னாள் படைவீர் கழகத்தினர் கட்டணம் வசூல் செய்வதற்கான பேச்சு நடந்து வருகிறது. அதுவரை, இலவசமாக வாகன நிறுத்தி கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது

* மாநகராட்சி சமுதாய நலக்கூடங்களில் ஓய்வு பெற்ற அலுவலர்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 50 சதவீத கட்டண சலுகையை, 75 சலுகை கட்டணமாக நீட்டித்து வழங்க அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நீர்நிலை மேம்பாடுக்கு

நிதி ஒதுக்கீடுசென்னை மாநகரட்சி கூட்டத்தில் பல்வேறு நீர்நிலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.* அம்பத்துார் மண்டலம், 86வது வார்டில் உள்ள கலைவாணர் குளத்தை மேம்படுத்த, 3.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது* பெருங்குடி மண்டலம், 191வது வார்டு ஜல்லடியான்பேட்டை, ஆஞ்சநேயா நகரில் உள்ள வண்ணாண் குட்டை குளத்தை மேம்படுத்த, 3.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது* அம்பத்துார் மண்டலம், 82வது வார்டில் உள்ள சடா குளத்தை மேம்படுத்த, இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.* அம்பத்துார் மண்டலம், 79வது வார்டில் அய்யன் குளம் புனரமைப்பு பணிக்கு, 1.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது* அம்பத்துார் மண்டலத்தில், மங்களபுரம் குளத்தை புனரமைக்க 1.82 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.



தொழில் வரி உயர்வு

சென்னை மாநகராட்சியில், 2018க்கு பின் தொழில் வரி உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, அரையாண்டுக்கான தொழில் வரி 35 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.ஆறுமாத கால வருவாய் (ரூ.) - பழைய வரி (ரூ.) - புதிய வரி (ரூ.)21,000 கீழ் இல்லை இல்லை21,000 முதல் 30,000 135 18030,001 முதல் 45,000 315 43045,001 முதல் 60,000 690 93060,001 முதல் 75,000 1,025 1,02575,000க்கு மேல் 1,250 1,250



விளையாட்டு பயிற்சிக்கு

கட்டணயம் உயர்வுவிளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்ள கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விளையாட்டு திடல்களை தரம் உயர்த்துவதற்கும், புதிய விளையாட்டுத்திடல்கள் அமைப்பதற்கும், புதிய உடற்பயிற்சி கூடங்கள், உள் விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளங்கள் கட்டுவதற்கும், மின்சார வசதி, தண்ணீர் வசதி, கழிப்பறை போன்றவற்றிற்கு அதிக செலவு ஏற்படுவதால், கட்டணம் உயர்த்தப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. உயர்த்தப்பட கட்டண விபரம்ஒருநாள் போட்டிகள்விளையாட்டு தற்போதைய கட்டணம்(ரூ.) உயர்த்தப்படும் கட்டணம்(ரூ.)ஹாக்கி 2,000 2,930கபடி 1,000 1,465டென்னிஸ் 5,000 7,325பூபந்து 2,000 2,930கால்பந்து 2,000 2,930கிரிக்கெட் 5,000 7,325ஸ்கேட்டிங் 5,000 7,325இறகு பந்து 5,000 7,325கேரம், செஸ், டெபிள் டென்னிஸ் 5,000 7,325விளையாட்டு விழா 5,000 7,325பயிற்சி கட்டணம்ஒரு மாதத்திற்கு, தினம் ஒரு மணி நேரம்டென்னிகாய்ட் 1,000 1,465கோ - கோ 1,000 1,465கூடைப்பந்து 2,000 2,930கைப்பந்து 1,000 1,465இறகு பந்து 1,000 1, 465ஹேண்ட்பால் 1000 1,465ஸ்கேட்டிங் 2,000 2,930கராத்தே, ஜுடோ, குத்துச்சண்டை, மல்யுத்தம், சிலம்பம் 2,000 2,930



உரிமையை விட்டுக்கொடுத்த மாநகராட்சி

கம்யூ., கவுன்சிலர்கள் வெளிநடப்புஉள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் அவற்றுக்கு பிரத்யேக உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக, அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளை விரும்பாவிட்டால், உள்ளாட்சி அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றலாம். இதன் வாயிலாக மதுக்கடைகளை அகற்றும் அதிகாரமும் உள்ளாட்சிகளுக்கு உண்டு. இதே போல, எந்த தொழில்களை தங்கள் எல்லைக்குள் நடத்தலாம் என்பதையும், அவற்றுக்கு உரிமக்கட்டணம் எவ்வளவு நிர்ணயிக்கலாம் என்பதையும் உள்ளாட்சிகள் அதிகாரத்தில் விடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது சென்னை மாநகராட்சி 42 தொழில்களுக்கு அனுமதி அளிப்பது, மறுப்பது, உரிமக்கட்டணம் வசூலிப்பது போன்றவற்றை மத்திய, மாநில அரசுகளின் அதிகார வரம்புக்கு விட்டு கொடுத்திருப்பது, கவுன்சிலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'பதிவு உரிமம் வழங்குவதில் இருந்து மாநகராட்சி விலகி இருப்பது, உள்ளாட்சி அமைப்புகளின் தத்துவத்திற்கு எதிரானது. மேலும், குறு, சிறு வணிகங்களுக்கான தொழில் உரிமம் உயர்த்தி இருப்பது, வியாபாரிகளை பாதிக்கும்' என, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி கூட்டத்தில் வெளிநடப்பு செய்தனர்.



மத்திய பட்ஜெட் கிழிப்பு!

சென்னை மாநகராட்சி கூட்டத்தின் போது, காங்கிரஸ் மற்றும் ம.தி.மு.க., கவுன்சிலர்கள், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதியளவில் நிதி ஒதுக்கவில்லை என எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசின் பட்ஜெட் நகலை கிழித்தனர். சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை மாநகராட்சி கவுன்சிலராக பதவி வகித்தவர். அவர் மறைவுக்கு, நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us