Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு

அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு

அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு

அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு

ADDED : ஜூலை 31, 2024 12:14 AM


Google News
வடபழனி, வடபழனி, பாரதீஸ்வர் காலனியைச் சேர்ந்தவர் பாரதி, 70; 'பினாயில்' வியாபாரம் செய்தார்.

திருமணமாகாத இவர், தனியாக வசித்து வந்தார். கடந்த மூன்று மாதங்களாக, உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்து, துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர், வடபழனி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உள்ளே சென்று பார்த்தபோது, பாரதி இறந்து கிடந்தது தெரிந்தது.

இதையடுத்து, அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை மீட்டு, கே.கே., நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us