அலையில் சிக்கிய சிறுவர்கள் மீட்பு
அலையில் சிக்கிய சிறுவர்கள் மீட்பு
அலையில் சிக்கிய சிறுவர்கள் மீட்பு
ADDED : ஜூலை 11, 2024 12:13 AM
சென்னை, பொதுப்பணி துறை அலுவலகம் எதிரே மெரினா கடற்கரையில் நேற்று காலை சிறுவர்கள் சிலர் குளித்தனர்.
அப்போது திடீரென வந்த பெரிய அலையில் சிக்கி பேசின்பாலம் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
சிறுவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதை கவனித்த மீட்பு படையினர், விரைந்து சென்று பத்திரமாக மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர்.