/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கூவத்தில் மிதந்து வந்த ஆண் சடலம் மீட்பு கூவத்தில் மிதந்து வந்த ஆண் சடலம் மீட்பு
கூவத்தில் மிதந்து வந்த ஆண் சடலம் மீட்பு
கூவத்தில் மிதந்து வந்த ஆண் சடலம் மீட்பு
கூவத்தில் மிதந்து வந்த ஆண் சடலம் மீட்பு
ADDED : ஜூன் 20, 2024 12:21 AM
மயிலாப்பூர், கூவம் ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரிக்கின்றனர்.
மயிலாப்பூர், சாய்பாபா கோவில் அருகிலுள்ள கூவம் ஆற்றில், நேற்று காலை, 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது.
இதைப்பார்த்த அங்கிருந்தோர், மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார்? அவர் கூவம் ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலையா என, போலீசார் விசாரிக்கின்றனர்.