Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'பெலிகான்' பறவை பத்திரமாக விடுவிப்பு

'பெலிகான்' பறவை பத்திரமாக விடுவிப்பு

'பெலிகான்' பறவை பத்திரமாக விடுவிப்பு

'பெலிகான்' பறவை பத்திரமாக விடுவிப்பு

ADDED : ஜூன் 11, 2024 05:36 PM


Google News
Latest Tamil News
ஆவடி:ஆவடி அடுத்த பட்டாபிராம், ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் ரூபேஷ் குமார். இரு நாட்களுக்கு முன், இவரது வீட்டு வாசலில் பெலிகான் என்று அழைக்கப்படும் புள்ளி அலகு கூழைக்கடா சிறு காயங்களுடன் தங்கியுள்ளது.

இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி பல்லுயிர் பாதுகாப்பு நிறுவன குழுவினர், பறவையை மீட்டு, மூன்று நாட்கள் சிகிச்சை அளித்தனர்.

பின், பெலிகான் பறவைகள் அதிகம் கூடும், ஆவடி விளிஞ்சியம்பாக்கம் ஏரியில் பத்திரமாக விடுவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us