Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ புதர்மண்டிய குடிநீர் வாரிய இடம் விஷ ஜந்துக்களால் அயனாவரத்தில் பீதி

புதர்மண்டிய குடிநீர் வாரிய இடம் விஷ ஜந்துக்களால் அயனாவரத்தில் பீதி

புதர்மண்டிய குடிநீர் வாரிய இடம் விஷ ஜந்துக்களால் அயனாவரத்தில் பீதி

புதர்மண்டிய குடிநீர் வாரிய இடம் விஷ ஜந்துக்களால் அயனாவரத்தில் பீதி

ADDED : ஜூலை 18, 2024 12:32 AM


Google News
Latest Tamil News
அயனாவரம்,அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட நியூ ஆவடி சாலையோரத்தில், வில்லிவாக்கம் முதல் ஐ.சி.எப்., வரை மற்றும் கீழ்ப்பாக்கம், அயனாவரம் வழியாக குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான காலி மனையில் ராட்சத குழாய் செல்கிறது.

போதிய பராமரிப்பு இல்லாததால், இந்த காலி இடம் முழுதும், புதர் மண்டி செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன.

இதுகுறித்து அப்பகுதி வாசிகள் கூறியதாவது:

நியூ ஆவடி சாலையோரம், அயனாவரம் பகுதியில் உள்ள குடிநீர் வாரிய இடத்தில், போதிய பராமரிப்பு இல்லாததால், வில்லிவாக்கம் முதல் அயனாவரம் வரை 3 கி.மீ., துாரம் செடிகள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது.

குறிப்பாக, அயனாவரம் சோலையம்மன் தெரு பகுதியில் புதர்மண்டி உள்ளது. இப்பகுதியைச் சுற்றி தனியார் பள்ளி, குடியிருப்புகள் உள்ளன. இந்த காலி இடத்தில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளன.

இப்பகுதியில் மட்டுமல்லாமல், நியூ ஆவடி சாலையோரத்தில் உள்ள வாரியத்தின் இடம் முழுதும் இதே நிலை தான் நிலவுகிறது. அதுமட்டுமின்றி, வாரியத்திற்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைத்தும், சிலர் அத்துமீறி குப்பையை கொட்டி வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, காலி மனையில் வளர்ந்துள்ள செடிகளை அப்புறப்படுத்தி பராமரிக்கவும், குப்பை கொட்டுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us