Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நியூ கல்லுாரி மாணவர்கள் கபடியில் 'கில்லி'

நியூ கல்லுாரி மாணவர்கள் கபடியில் 'கில்லி'

நியூ கல்லுாரி மாணவர்கள் கபடியில் 'கில்லி'

நியூ கல்லுாரி மாணவர்கள் கபடியில் 'கில்லி'

ADDED : ஜூலை 27, 2024 12:53 AM


Google News
Latest Tamil News
சென்னை, ஜூலை 27--

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லுாரி சார்பில், அதன் நிறுவனர் ஹாரி குரோ பக்கை நினைவுகூரும் வகையில், 'பக்' கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.

இதில், வாலிபால், தடகளம், பேட்மின்டன், பால் பேட்மின்டன், குத்துச்சண்டை உட்பட 18 விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 5,000 மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர்.

இதில், நேற்று முன்தினம் இரவு நடந்த கபடி போட்டியின் முதல் அரையிறுதியில், நியூ கல்லுாரி மற்றும் லயோலா அணிகள் மோதின. இதில், 35 - 28 என்ற கணக்கில் நியூ கல்லுாரி அணி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

மற்றொரு அரையிறுதியில், சவீதா பல்கலை அணி, 30 - 22 என்ற கணக்கில் ஒய்.எம்.சி.ஏ., அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

எம்.ஓ.பி., அபாரம்


நள்ளிரவில் நடந்த இறுதிப் போட்டியில், நியூ கல்லுாரி மற்றும் சவீதா பல்கலை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான போட்டி முடிவில், 57 - 37 என்ற நியூ கல்லுாரி அணி வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது.

பெண்களுக்கான கால்பந்து போட்டியில், ஜேப்பியார், எம்.ஓ.பி., - ஒய்.எம்.சி.ஏ., மற்றும் எஸ்.டி.என்.பி., ஆகிய நான்கு அணிகள் மோதின.நேற்று மதியம் நடந்த இறுதிப் போட்டியில், எம்.ஓ.பி., வைஷ்ணவ் அணி, 6 - 0 என்ற கணக்கில் ஒய்.எம்.சி.ஏ., அணியை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us